திருச்சி மாநகராட்சி 39வது வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம்
திருச்சி, டிச.10 பகுதி சபா கூட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 39 வது வார்டில் உள்ள கொக்கரசம்பேட்டை பகுதியில் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பகுதியில் உள்ள பொதுமக்களிடம் 11 மனுகள் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக மாமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.
நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் ரெமிலா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சக்திவேல், அருள், பெரியசாமி மற்றும் பகுதியில் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.