உழைப்பாளர் தினத்தன்று அரசு மதுபான கடைகள் இயங்காது

0 11
Stalin trichy visit

திருச்சி, ஏப்.29   மே தினத்தை முன்னிட்டு 01.05.2026 (வெள்ளிக் கிழமை) அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (FL 1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.