ஜோசப் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி : அமைச்சர்கள் வழங்கினர்
திருச்சி, ஜன.10 திருச்சி சத்திரம் பகுதியிலுள்ள ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் வழங்கி விழா சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், ஜோசப் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.