தா.பேட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முசிறி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருச்சி, பிப்.9 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் (09.02.2026) திங்கட்கிழமை காலை அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தா.பேட்டை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் துணைத் தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.