அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
திருச்சி ஜூன் 10 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொன்மலை பகுதி குழு ஏர்போர்ட் கிளையின் சார்பில் ஏர்போர்ட் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட குழு உறுப்பினர் காட்வின் தலைமையில் திருச்சியில் காலியாக உள்ள 12,000 மேற்பட்ட அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் கிளை தோழர்கள் ரமேஷ் டி.ரமேஷ் ராம்குமார் மாதர் சங்க பகுதிக்குள் உறுப்பினர் சித்ரா
வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் விஜயேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்