மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி, ஜூன் 19 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி, வேளாண்மை உதவி இயக்குநர் (மாநில திட்டம்) கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் சரண்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட அரசுத்துறைகளின் உயர் அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.