சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் எதிர்ப்பு ஓட்டம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூன் 26 சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நானை முன்னிட்டு திருச்சி அண்ணாவிளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு பதாகையில் கையொப்பமிட்டு ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ் போதை பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, உதவி ஆணையர் (கலால்) சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசுகந்தி, விளையாட்டு விடுதி மேலாளர் மற்றும் பயிற்றுநர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.