ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளை வீடியோ எடுத்தவர் மீது வழக்குப்பதிவு
திருச்சி, ஜூலை 9 ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளை வீடியோ எடுத்த நோயாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வினோத் என்பவர் காலில் காயத்துடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சு களை அவர் செல்போனில் வீடியோ எடுத்ததுடன், அங் கிருந்த டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக
தெரிகிறது: இதுகுறித்து ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவ லர் ராஜ்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வினோத் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.