பள்ளிக்கு செல்ல சைக்கிளிலின்றி சிரமப்பட்ட சிறுவன் – உதவிக்கரம் நீட்டிய எம்பவர் டிரஸ்ட்!
திருச்சி எம்பவர் டிரஸ்ட் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், நலிவடைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது என பல்வேறு சமூக செயல்பாடுகளோடு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியில் வசித்து வரும் 4ஆம் வயது மாணவன் இம்மானுவேல். பழூர் பகுதியில் ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாயார் மனநிலை பாதிக்கப்பட்டும், தந்தை பெயிண்டர் ஆக தங்களுடைய வாழ்வை நடத்தி வந்துள்ளனர்.

இவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிளோமின் ஜெயசீலி உதவிகள் செய்து வரும் நிலையில் அச்சிறுவனுக்கு பள்ளிக்கு செல்லவும், உரிய நேரத்தில் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் பெயரில், எம்பவர் டிரஸ்ட் சார்பாக நன்கொடையாளர்கள் சேரமன்னன், விஜயராணி, சுந்தரராஜன் ஆகியோர் மூலம் மிதிவண்டியை நன்கொடையாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8