நவலூர் குட்டப்பட்டு பகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்குசேகரிப்பு
திருச்சி, ஏப். 20 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரன் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் உள்ள முத்துகுளம் வண்ணாங்கோவில் பாரதி நகர் அம்பேத்கார் நகர் மாதா கோவில் மேல தெரு பிள்ளையார் கோவில் அருகங்கால்பட்டி நவலூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் சேவியர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் நவலூர் குட்டப்பட்டு செல்வம், பாஜக மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பிஜேபி பொறுப்பாளர் முரளிதரன், ஐஜேகே கூட்டணி கட்சி மாவட்ட தலைவர் மணிவேல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் ஜான் கென்னடி, அமமுக ஒன்றிய செயலாளர் திரு இளங்கோவன் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் பட்டையார், செல்வமணி , முத்துக்குமார், பாஜக ஐயா கண்ணு, þ லெனின் பாண்டியன், வழக்கறிஞர் அணி பிரிவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணுச்சாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.