அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

0 46

திருச்சி, மார்ச், 20 மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள சங்க நிர்வாகிகள் பங்கு பெறும் அகில இந்திய பொது

வேலை நிறுத்த ஆயத்த திருச்சி மண்டல மாநாடு திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள சீனிவாசா மஹாலில் வியாழனன்று நடைபெற்றது.மாநாட்டிற்கு தொமுச மாவட்ட செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை தாங்கினார்.
சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் வரவேற்றார். இதில் தொமுச பேரவை பொருளாளர் வள்ளுவன், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், எச்.எம்.எஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், ஏஐசிசிடியு மாநில துணைத்தலைவர் மதியழகன், எல்எல்எப் மாநில பேரவை அமைப்பாளர் பேரறிவாளன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள்
சி.ஐ.டி.யு சீனிவாசன், ஏ.ஐ.டி .யு.சி , நடராஜா, ஐ.என்.டி.யு.சி வெங்கட் நாராயணன், எச்.எம்.எஸ் ஜான்சன், ஏஐசிடியுசி ராசேந்திரன், எல்.எல். எப் தெய்வீகன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கத்தை தடுத்து நிறுத்தவும், பொதுமக்களின் சொத்துக்களை அதானி, அம்பானிகளுக்கு தாரை வார்ப்பதை தடுத்திடவும்,   பாசிச,பா.ஜ.க. மதவெறி கும்பலை விரட்டி அடிக்கவும், தொழிலாளர்கள் – விவசாயிகளை ஓரணியில் திரட்டவும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தராமலும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் நடைபெற உள்ள வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.