கலைஞர் நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கல்
திருச்சி,ஆக.7 முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி திருச்சி பிராட்டியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொன்னகர் பகுதி திமுக. செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
இதில் வட்டச் செயலாளர்கள் கவுன்சிலர் ராமதாஸ், பி.ஆர். பால சுப்பிரமணியன், மூவேந்திரன், தனசேகர், மாவட்ட பிரதிநிதி அந்தோணிசாமி, பகுதி அவைத்தலைவர் பவுன்ராஜ், துணை செயலாளர் மோகன், பிரதிநிதி சர்ச்சில், திருப்பதி, சிறுபான்மை பிரிவு நத்தர் அலி, இளைஞர் அணி சார்லி, தேவராஜ், கார்த்தி, பிராட்டியூர் மணிவேல், ஐ.டி. விங் மணிவண்ணன், பிரசாந்த், ரெங்கர். அப்துல் மஜித், எஸ். அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.