மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஏற்பாடுகள் : எம்.எல்.ஏ. ஆய்வு
திருச்சி, டிச. 18 திருச்சி மாவட்டம், தொட்டியம் சிவன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் பணியினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருகில் பேரூராட்சித் தலைவர் சரண்யா பிரபு மற்றும் செயல் அலுவலர் பிரகந்தநாயகி ஆகியோர் உள்ளனர்.