உலக வண்ணத்துப்பூச்சி தினத்தையொட்டி மாணவர்களுக்கு போட்டி!
திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உலக வண்ணத்துப்பூச்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலூர் அய்யனார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100 மாணவர்களுக்கு உலக வண்ணத்துப்பூச்சி

தினமான இன்று வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்தி போட்டிகள் நடத்தப்பட்டது. களிமண்ணில் ஆன மாதிரிகள், ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.