மணப்பாறை அருகே மாமுண்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், சமுத்திர ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாநில சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் தத்தநாயக்கன்பட்டி மாமுண்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.