டி.என்.பி.எஸ்.சி.குரூப்.4 போட்டித் தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்
திருச்சி, ஜூலை 10 தமிழ்நாடு அரசுப்ணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தேர்வாணைய குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.