முதலமைச்சர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் : வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
திருச்சி, மார்ச் 22 திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி திமுக அரசின் சாதனைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது