வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 19ம் தேதி சனிக்கிழமையன்று திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை ஆட்டோ வாகனத்தில் பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தினை கொடியசைத்துத் தொடங்கி வைத்து, துண்டுப் பிரசுரத்தினை வெளியிட்டு வழங்கினார். அருகில் துணை இயக்குநர் ஜெ.மகாராணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஏ.கலைச்செல்வன் மற்றும் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் உள்ளனர்.