திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி, ஜூன் 27 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபி சனு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்-குநர் அரசு, வேளாண்மைத்துறை துணை இயக்குநர் (மாநில திட்டம்) கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் சரண்யா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கந்தசாமி, அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.