முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் : தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை
திருச்சி, டிச.1 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6.ஆம் ஆண்டு நினைவு நாளான (5.12.2022- திங்கள் கிழமை) அன்று கழகத்தின் அனைத்து நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழகம், கிளைக் கழகம், வட்ட கழகம் தோறும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவ படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அன்னதானம் மற்றும் நினைவஞ்சலி நிழ்ச்சியினை நடத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.