41 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவிகள்
மணப்பாறையில் 41 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவிகள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1982 ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவிகள் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றிணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவிகள் தங்களது பள்ளி நாட்களில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து கொண்டனர். மேலும் தற்போது தங்களின் நிலை குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு மகிழ்வுற்றனர்.