மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். புதூர் பூசாரிகொட்டம் பகுதியில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சிறுமி மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள எஸ் புதூர் பூசாரி கொட்டம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகந்திரம். இவர் வீட்டின் மின் விசிறியில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இவரது மகள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னார் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.