ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து கூலி தொழிலாளி தற்கொலை
திருச்சி, ஜூலை 9 மன்னார்குடியில் இருந்து திருச்சி நோக்கி காலை 8 35 மணிக்கு வந்த பயணிகள் ரயில் திருவெறும்பூர் குமரேசபுரம் அருகே உள்ள வந்து கொண்டிருந்தது அப்போது ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்தார். வேகமாக வந்த ரயில் மோதியதில் அவர் தலை தூண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்கள் விசாரணை செய்தது போது அவர் துவாக்குடி அண்ணா வளைவை சேர்ந்த மாணிக்கம் ஆசாரி என்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் மாணிக்கம் ஆசாரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.