மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா
மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா.
ஆறாம் நாள் காமாட்சி அம்மன் அலங்காரம் – திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா.
ஆறாம் நாள் காமாட்சி அம்மன் அலங்காரம் – திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 123ம் ஆண்டு திருவிழா டிச.28ம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும்
திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்நிலையில். ஆறாம் நாள் விழாவில் பகவதி அம்மனுக்கு ” காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து ” ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந் து கொண்டு ஒம் சக்தி பராசக்தி பக்தி முழங்க தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.