மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் வார வழிபாட்டு மன்றத்தின் கஞ்சி கலையம் எடுக்கும் விழா
தா. பேட்டை உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் வார வழிபாட்டு மன்றத்தின் கஞ்சி கலையம் எடுக்கும் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் செவந்தாம்பட்டி மதுரை வீரன் சாமி கோயிலில் இருந்து கஞ்சி கலயத்தை சுமந்து கொண்டு முக்கிய வீதி வழியாக மேளதாளம் வழங்க வருகை தந்தனர் பின்னர் வார வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலயம் வைத்து மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் நோயற்ற வாழ்வு வாழவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இவ்விழாவில் மாலை அணிந்து விரதம் இருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.