பள்ளி விளையாட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள இன்ஃபேண்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 20’வது ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் M.பிரதீப் குமார், அருட்திரு.நேசமணி, அருட்திரு.ஆபிரகாம் ஆகியோரும் பள்ளி மாணவர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.