பெண் தொழில்முனைவோருக்கு தையல் எந்திரம் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி, ஜூலை 1 திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உயகொண்டான் திருமலை கொடாப்பு 25வ து வார்டு பகுதியை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவியாக 13 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,ஏ ஐ டி யூசி மாவட்ட துணை செயலாளர்
சுமதி உள்ளிட்ட பலர் உடண் இருந்தனர்.