திருச்சி அருகே புதிய பயணியர் நிழற்குடை – அமைச்சர் திறந்து வைத்தார்
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் 2020 – 21 ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையையும் அதனைத் தொடர்ந்து கிழக்குரிச்சியில் புதிதாக அமைய உள்ள பூங்கா அமைவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர் மாரியப்பன் பகுதி கழக செயலாளர் இ.எம் தர்மராஜ், நத்தம்மாடிப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயராஜ்ஜோஸ்பின், கங்காதரன் பாலமுருகன், ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நகர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கலந்து கொண்டனர்.