பஞ்சப்பூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, டிச.26 திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையம், வணிக வளாகத்தின் கட்டுமானப்பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி ஆணையர் சண்முகம் உள்பட பலர் உள்ளனர்.