போலி பாஸ்போர்ட்டில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி கைது
திருச்சி ஜூலை 16 சார்ஜாவிலிருந்து ஒரு விமானம் நேற்று இரவு திருச்சி வந்தடைந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 54) எந்த இடத்தில் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த போது அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது, இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.