போதை மாத்திரை விற்றவர் கைது

0 43
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 20 திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜூலை 18ம் தேதி அரசு மருத்துவமனை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியம் அருகே போதை மாத்திரை விற்ற புத்துார் கீழவண்ணாரப்பேட்டை ரெக்ஸ் டேனியல்(20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.