ஏழை முஸ்லீம்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
திருச்சி, ஆக.18 முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் ஆலி ஜனாப் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பான சேவை செய்ததற்கு தமிழக முதலமைச்சரின் விருது பெற்றதை பாராட்டி வாழ்த்துக்கள் கூறிய பிறகு ஏழை முஸ்லீம்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிடக்கோரியும், திருச்சி பஸ் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்துகளில் காட்டூர் பயணிகளை ஏற்றி இறக்க கோரியும் மனு அளித்தனர். உடன் மாநில தலைமை கழக செயலாளர் Y. சாதிக்கான், மாவட்ட துணைசெயலாளர் முபீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் A.H.மஜீத் ஆகியோர் உள்ளனர்.