புதுச்சேரி முதலமைச்சர் திருச்சி வயலூர் முருகன் கோவில் சாமி தரிசனம்
திருச்சி, மார்ச் 30 புதுச்சேரி முதலமைச்சர் திருச்சி வயலூர் முருகன் கோவில் சாமி தரிசனம் செய்தார்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று திருச்சிக்கு வருகை தந்தார். சாலை மார்க்கமாக தனது காரில் திருச்சிக்கு வருகை தந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்சியில் உள்ள ஏழாம் படை வீடான வயலூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் முதல்வர் ரங்கசாமிக்கு மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.