ஸ்ரீரங்கத்தில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு
திருச்சி, டிச. 9 திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 1(ஸ்ரீரங்கம்) வார்டு எண். 4க்குட்பட்ட அம்பேத்கார் நகர் இடுகாடு வளாக பகுதியில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மய்யம் மற்றும் ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் மையத்தை இன்று காலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் முன்னிலையில் மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வ்வில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் ஆண்டாள்,துர்காதேவி, நகர்நல அலுவலர் சர்மிலி, செயற்பொறியளர்கள் குமரேசன், பாலசுப்பிரமணியன்,உதவி ஆணையர்ரவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.