மழைநீரில் ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் ஆனந்த குளியல்
திருச்சி, செப்.19 மழைநீரில் ஆனந்த குளியல் போட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள்
திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள வளாகபகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமடமின்றி கோவில் மேல்தளத்தில் இருந்து வடிந்த மழைநீர் அருவி போல் கொட்டியது. இதைக்கண்ட கோவில் யானை ஆண்டாள் உற்சாக மிகுதியால் அந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.