மாநில அளவிலான சிலம்ப போட்டி: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.4 மாநில அளவிலான சிலம்ப போட்டியானது இராவணன் சிலம்பம் அகாடமியின் நிறுவனர் இலக்கிய தாசன் அவர்கள் தலைமையில் திருச்சி வள்ளனார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். உடன் கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன், நடிகர் கராத்தே ராஜா, நடிகை நடிகை காயத்ரி ரேமா,நடிகை ஐஸ்வர்யா,திரைப்பட இயக்குனர் தினேஷ் கலைச் செல்வம்,வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.