ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி, ஜூன் 30 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் பெரியார் சிலை அருகில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் பயிற்சி முகாமினை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்து பயிற்சி முகாமில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடம் முதலமைச்சரின் ஆணையை நிறைவேற்ற அயராது உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பொறுப்பாளர் மணிராஜீ தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், சிவக்குமார் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் நகர கழக செயலாளர் காயம்பு, பேரூர் செயலாளர் தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.