தமிழ் தேசியம் பாசிசமாக மாறக்கூடாது : தமிமுன் அன்சாரி பேட்டி

0 364
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையம் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி இருக்கும் என கருதுகின்றோம்.

நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணிக்கு மீது வெளியிலும் உட்புறத்திலும் விமர்சங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்போடு, சிறந்த ஒருங்கிணைப்போடு இருக்கிறது என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வாயிலாகவும் நிரூபிக்க வேண்டி உள்ளது நாட்டினுடைய நலனிலும் இந்த வெற்றி அடங்கியுள்ளது என்ற காரணத்தினால் உறுதியாக எங்களது களப்பணி அங்கே இருக்கும்

பல்கலைக்கழகம் மானிய குழுவின் தேவையில்லாத திருத்தங்களை மேற்கொள்வது மூலம் கல்வியின் தரத்தை சீர்குலைக்க கூடிய முயற்சியாக இருக்கிறது என்பதை கருதுகிறோம். கல்வியின் மாண்பும் பல்கலைக்கழகத்தின் தரம் முன்பிருந்த வகையிலே தொடர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சரியா நடக்காது என்பது தேர்தல் ஆணையத்தை அவமதித்துள்ளார். ஜனநாயகத்தில் சமநிலை இருக்கும் என்றால் எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போராட வேண்டும் அவர்களுக்கு பின்வாங்கி இருப்பது மூலமாக மோசமான தோல்வி ஒப்புக்கொள்ளுள்ளனர். மோசமான தோல்வி பயம் தான் அவர்கள் பின் வாங்கி உள்ளனர்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான இடப்பதிர்வை தரவேண்டும் என கேட்டிருந்தோம் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தேர்தல் அறிவிப்பு வந்த பின் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை இடங்கள் என்பது பேச்சு வார்த்தையில் மூலம் தான் முடிவு செய்ய முடியும்.

மாதாந்திர மின் கட்டணத்தை கண்டிப்பாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
இது மக்களுடைய விருப்பம் திராவிடத்தை மதிப்பது போல் தமிழ் தேசியத்தை மதிக்கின்றோம். தமிழ் தேசியம் என்பது தமிழ் பாசிசமாக மாறக்கூடாது அதில் தெளிவாக உள்ளோம். பெரியாரைப் புகழ்ந்து பேசித்தான் தமிழ்நாட்டு மேடைகளில் வலம் வந்தார். அதில் தான் மிகப்பெரிய உச்சத்தில் எட்டினார். பெரியாரின் கைத்தடித்தான் .இலங்கையில் பிரபாகரன் துப்பாக்கியாக மாற்றியது என பேசினவர்.

பெரியாரே கருத்து மீது விமர்சனம் வையுங்கள் என்று கூறியுள்ளார். அவர் சொல்லாத கருத்துக்களை சொல்லுவது தவறு. பெரியாரின் கல்லறையில் சேதப்படுத்துவது போல சீமான் கருத்து கண்டிக்கத்தக்கது.

யாரையோ திருப்தி படுத்துவதற்காக பெரியாரை எதிர்க்கார் என்பது எங்களது சந்தேகம். அரசுடமை ஆக்கினால் தான் ஆதாரத்தை காட்டுவேன் என்று கூறுவது தப்பித்துக்கொண்டு போகும் ஒரு முயற்சி.  திராவிடக் கழகத்தினர் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால் அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்கலாம்.

பெரியார் எல்லா கருத்தையும் நாம் ஒன்றுபட முடியாது பெரியார் கடவுள் இல்லை என சொல்லி இருக்கிறார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கோபத்தில் கூறியிருக்கிறார். அதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறார். திருக்குறளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது காமத்துப்பாலை நீக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். பெரியாரின் சில கருத்துக்கள் காட்டமாக தான் உள்ளது.எத்தனையோ இடங்களில் இஸ்லாமியரையும் இஸ்லாத்தையும் ஏற்றி போற்றியும் பேசியுள்ளார்.
சில கருத்துக்கள் முரண்பட்டு இருக்கலாம். ஒவ்வொரு கருத்து ஒவ்வொரு தலைவரிடம் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். பெரியார் பாசிசத்திற்கும், ஆரியத்திற்கும் எதிராக இருக்கிறார். பெரும்பாலான கருத்துக்கள் சமூக நீதிக்கு, சமத்துவத்துக்கும் ஆதரவாக இருப்பதால் அதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

சீமானுக்கு இஸ்லாமியர் மட்டுமா ஓட்டு போடவில்லை உங்களுடைய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஓட்டு போட்டார்கள் உங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா உங்கள் அரசியல் நடவடிக்கை பொருத்தம்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

தமிழகத்தில் திமுகவை போலவும் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் பாதுகாப்பான அரசியல் இயக்கம் எது என்று தேர்வு செய்து வாக்களிக்கின்றனர் ஆதரிக்கின்றனர்.

இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களை சாத்தான பிள்ளைகள் என கூறினார் இதுக்கு மக்கள் மத்தியிலே கோபத்தை ஏற்படுத்துகிறது ஒரு சிறந்த தலைவராக தலைமையாக அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திராவிட மாடல் அரசியலில் எங்கேயும் இஸ்லாமுக்கு எதிராக வன்முறை நடைபெறவில்லை.

இஸ்லாமிய சிறைவாசிகள் நடவடிக்கையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவையில் ஏற்பட்ட மாட்டுக்கறி பிரச்சனை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். 3.5சதவீத ஒதுக்கீடு அதை அதிகப்படுத்துவது அவர்கள் கையில் இருக்கிறது அதையும் செய்வார்கள்.

தமிழக நலனுக்காக அடிப்படை வழித்தடங்களை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

தேசிய அளவில் காந்தியையும், தமிழகத்தில் பெரியாரையும் அப்புறப்படுத்த நினைக்கின்றனர். அவர்களது அழுத்தமான தாக்கங்களை மறைக்க முடியாது.

பல்கலைக்கழக பெண் விஷயத்தில் எப்படி அரசியல் ஆக்கலாம் என முனையப்படுகிறேன் என்பதை நீதிமன்றமே கூறுகிறது. சட்டங்கள மூலமாக அதிகப்பட்சமாக நடவடிக்கை எடுப்பதை மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி வரவேற்கிறது.

ஒன்றிய அரசோடு முரண்பாடு காரணமாக வரவேண்டிய நிதிகள் வராததால் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் பெங்கலுக்கான நிதியை தரவில்லை. தேர்தல்காக அறிவிக்க வேறு பண்டிகை காலத்தின் போது கொடுக்கிற அறிக்கை வேறு.

விஜய் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றார் என்ற கேள்விக்கு

திமுக எதிர்த்தால் தான் அவர் அரசியல் செய்ய முடியும். நீட்டைப் பொறுத்தவரை மத்தியில் எதிர்பார்த்தது போல் ஆட்சி அமையவில்லை.
தற்போது அந்த கோரிக்கை நாடு தழுவிய கோரிக்கையாக மாறி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பு, விற்பனை உயர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் அதை முழுமையாக ஏற்கவில்லை 100% மதுவிலக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்.

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் திமுக,அதிமுக ஆட்சியில் அல்ல. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரினாவில் எழுச்சியோடு நடைபெற்றதே. அதன் பிறகு தான் தமிழகத்தில் நகரம் முழுவதும் இருந்து கிராமங்கள் தோறும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பரவி உள்ளது இதில் மாபெரும் சதி உள்ளதாக கருதுகிறோம் பஞ்சாபில் ஏற்பட்ட மாநில அளவிலான விழிப்புணர்ச்சியை மழுங்கடைப்பதற்காக திட்டமிட்டு அங்கு கஞ்சா போதை அபின் பொருட்கள் பரவ செய்யப்பட்டு அந்த இளைஞர்களை மூளைத்திறன் இழப்புக்கு ஆளானார்கள்

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களையும் மாணவர்களையும் மதி மயங்க செய்ய என்ற உள் நோக்கத்தோடு மிகப்பெரிய சதியின் பின்னணியில்தான் இவை பரப்பப்படுவதாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.