எச்.இ.பி.எப். நிர்வாகத்தை கண்டித்து தொழிற் சங்கத்தினர் மனிதசங்கிலி பேராட்டம்
திருச்சி, ஜூலை 18 HEPF நிர்வாகம் மற்றும் MIL தலைமை நிர்வாகம் இணைந்து தன்னிச்சையாக HEPF (HAPP) ல் உற்பத்தி செய்யும் பொருட்களின் SMH(Standard man hours)5% தன்னிச்சையாக குறைத்ததை எதிர்த்து கடந்த 14-07-25 முதல் 18-07-25 முடிய ஒரு வாரம் போராட்ட வாரம் கடைபிடித்து வந்தது இறுதி நாளான இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு சங்கத்தின் உதவி தலைவர் சத்தியவாகிசன் தலைமை தாங்கினார் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரணியன் முன்னிலை வகித்து கண்டன கோசங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் HAPFEU எம்ப்ளாயீஸ் யூனியன் உறுப்பினர்கள் திரளாக பங்கெடுத்தனர் . நிர்வாகம் SMH குறைப்பை கைவிடவில்லை எனில் ஆகஸ்ட் 15 நாட்டின் 78 வது சுதந்திர தினம் கொண்டாடும் அன்று தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரதம் செல்ல உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.