திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யோகநாதன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை
திருச்சி, மே 14 திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யோகநாதன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை துறையூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய நகர அதிமுக சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட செயலாளர் யோகநாதன் உப்பிலியாபுரம் துறையூர் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று அண்ணா பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன் ஒன்றிய செயலாளர்கள் பொன் காமராஜ் அழகாபுரி செல்வராஜ் ராமோகன் நகர செயலாளர்கள் ராஜாங்கம் ராஜேந்திரன் ஜெ பேரவை ஒன்றிய செயலாளர் ராமஜெயம் ஒன்றிய பொருளாளர் கலைவாணன் முன்னாள் சேர்மன் மனோகரன் முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வழக்கறிஞர்கள் அன்பு பிரபாகரன் கோகுல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்