திருச்சி – தஞ்சை அணுகுசாலை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, ஜுலை 4 திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மண்டலம் மூன்றின் தலைவர் மு. மதிவாணன்,
மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், கோவிந்தராஜ், சிவக்குமார், ரெக்ஸ், சிராஜுதீன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.