தா.பேட்டை அருகே பிள்ளா பாளையம் கிராமத்தில் அக்னி மாரியம்மன் கோயில் திருவிழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருச்சி தா.பேட்டை அருகே பிள்ளாபாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅக்னி மாரியம்மன் கோயில்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி பாலித்தல், தேர் அலங்காரம், கங்கணம் கட்டுதல், அங்கம் புரளுதல், தீச்சட்டி எடுத்தல், சக்தி அழைத்தல், உள்ளிட்டவைகள் நடைபெற்றது.நேற்று மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர்
கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தீமிரிவிழாவை காண பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.