திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மருத்துவ மாணவர்கள் வெள்ளை அங்கி அணியும் விழா
திருச்சி, டிச.1 திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், புதிய மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் இன்று (01.12.2022) நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் நேரு, துணை முதல்வர் மருத்துவர் அர்ஷியாபேகம், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
