மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் எலிமருந்து தின்று சாவு
திருச்சி செப் 10 திருவரங்கம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 33) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் தினேஷ்குமார் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி முத்துலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தினேஷ்குமார் தனது மனைவி பிரிந்து சென்றதை எண்ணி சோகத்தில் இருந்து உள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான தினேஷ்குமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 8- ந்தேதி இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.