இந்தியாவின் கருப்பு நாள் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் வீட்டிலிருந்து போராட்டம்
மோடி அரசு பதவியேற்ற நாளை (மே 26) இந்தியாவின் கருப்பு நாளாக அனுசரித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடியேந்தி அனுசரித்து வருகின்றனர். திருச்சியில் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் தனது வீட்டிலிருந்து போராட்டம் நடத்தினர் போராட்டத்தின் போது, காவி பாசிச பா.ஜ.க. அரசே விவசாய சட்டங்களை திரும்ப பெறு! விவசாயிகளை வஞ்சிக்கும் மோடியே பதவி விலகு! கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருந்துகளை வழங்கி, தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கிடு உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினார்.