தளர்வுகளற்ற முழு ஊரடங்கு – வெறிச்சோடிய திருச்சி மாநகர சாலைகள்
தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது, முழு ஊரடங்கால் திருச்சியின் பிரதான சாலைகளான மெயின்கார்டுகேட், சத்திரம் பேருந்துநிலையம், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.