திருச்சியில் மூதாட்டியிடம் 15 பவுன் செயின் பறிப்பு – போலீஸ் வலை!
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(57). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூன்று பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சந்திரா நேற்று சங்கிலியாண்டபுரத்திலிருந்து மகன் சபரி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு செல்ல மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் சந்திரா அணிந்திருந்த 15 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்