திருவனைக்காவல் யானை அகிலாவுக்கு 20ஆவது பிறந்தநாள் விழா
திருச்சி திருவனைக்காவல் யானை அகிலாவுக்கு 20ஆவது பிறந்தநாள் விழா கோயில் வளாகத்தில் சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
சிறப்பு பிராத்தனைகள் செய்த கோயில் அர்ச்சகர்கள்,யானையை மலர்கள் தூவி கஜபூஜை நடத்தி தீபாரதனை காட்டி வழிபாடு செய்தனர் பின்னர் அகிலாவிற்கு
பிடித்த தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் வழங்கப்பட்டது. பிறந்த நாள் கொண்டாடிய அகிலாவை கண்டு ஏராளமான பக்தர்கள் வாழ்த்துக்கள் கூறியும், பக்தர்கள் பாட்டு பாடியும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது