பெண்களுக்கான மாபெரும் விழா!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி சங்கம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான மாபெரும் விழாவை நடத்தினர். இதையொட்டி நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் பல பெண்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா
குழு தலைவியான ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாகி சுபா பிரபு விழாவின் நோக்கத்தை பற்றி அனைவருக்கும் எடுத்துரைத்தார். முன்னதாக வனஜா பெட்ரிக் மற்றும் சோபனா அனைவரையும் வரவேற்றனர். மேலும், ஜானகி வாழ்த்துரை வழங்கினார். முடிவில் சரண்யா நன்றி கூறினார்.