திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றது என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, ஹங்கேரி, பங்களாதேஷ், சூடான், நைஜீரியா, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 111 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் 78 பேர் விடுதலை செய்யக்கோரி கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும்,மேலும் சிலரை வழக்கு முடிந்தும், பிணையில் வந்தவர்களையும் கைது செய்து சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சிறப்பு முகாமில் உள்ள 40 -பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது தொற்றிலிருந்துமீண்ட நிலையில் சிறப்பு முகாமில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஆர்டிஓ விஸ்வநாதன் சமாதான